• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை – சுப்பிரமணிய சாமிக்கு மு.க.அழகிரி மகன் தயா அழகிரி பதிலடி

August 23, 2018 தண்டோரா குழு

மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என சுப்பிரமணிய சாமிக்கு மு.க.அழகிரி மகன் தயா அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு திமுகவில் தற்போது குழப்பமான சூழல் நிலவி வருகிறது. கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகரி, எனது தந்தையுடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என பேட்டியளித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அழகிரியின் கருத்து குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும் போது, வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள் வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம் எனக் கூறினார். இந்த கருத்துக்கு அழகிரியின் மகன் தயாநிதி அழகரி தனது டுவிட்டர் பக்கத்தில் காலம் காலமாக திமுகவிலும் அதிமுகவிலும் ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறன் என கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில்,நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான்,அழகிரியால் இட்லி கடை மட்டும் தான் வைக்க முடியும் என்றும் விமர்சித்தார்.இதையடுத்து அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை கடுமையாக விமர்சித்த தயா அழகிரி, சுப்பிரமணிய சுவாமியின் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டார் என கடும் கண்டனம் எழுந்தது.மேலும், இதுகுறித்து தயா அழகிரி டிவிட்டர் பதிவிலும் நேரடியாக பலர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில்,அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக ‘மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை’ என தயா அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க