• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய மண்டலப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

December 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.

இதையடுத்து மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய மண்டலம் மாநகராட்சி உதவி கமிஷனர் மகஷே் தலைமையில் உதவி நகர திட்டமைப்பு அலுவலர் பாபு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 3 பெட்டிக்கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஆவின் கடை உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க