• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய, கிழக்கு மண்டலங்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

January 8, 2021 தண்டோரா குழு

கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, டாடாபாத், ராஜீ நாயுடு லே-அவுட், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்கடைகளில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது, குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறப்பட்டுள்ளதா? இல்லையா? என கேட்டறிந்தார். அடையாள அட்டை பெறப்படவில்லை என்றால் உடனடியாக பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு சாலையோர வியாபாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பீளமேடு, பி.எஸ்.ஜி. ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மண்டல உதவி கமிஷனர்கள் மகேஷ்கனகராஜ் (மத்தியம்), முருகன் (கிழக்கு), செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க