December 4, 2018
தண்டோரா குழு
மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து திமுக சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் டிசம்பர்4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுக-வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
ஸ்டாலினுடன், திருநாவுக்கரசர், திருமாவளவன், காதர்மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.