• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் நீதி மைய்யத்தினர் ஆர்ப்பாட்டம்

December 8, 2020 தண்டோரா குழு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் விரோத சட்டங்களை கண்டித்தும் அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக கடுங்குளிர் என்றும் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோவை மாவட்ட மக்கள் நீதி மைய்யத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மத்திய அரசை கண்டித்தும் விதமாக கோசங்கள் எழுப்பியவர்கள் இதில் மத்திய அரசு உடனடியாக இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில மாநில பொதுகுழு உறுப்பினர் தங்கவேல்,மாநில மண்டல அமைப்பாளர் ரங்கநாதன்,மாநில செயலாளர் விவசாய அணி டாக்டர் மயில்சாமி செய்தி மற்றும் ஊடகம் துனை செயலாளர் பங்கஜ் சுரபி மாநில மண்டல இளைஞர் அணி துனை செயலாளர் பிரவீண்,மாநில துனை செயலாளர் வழக்கறிஞர் அணி உதயகுமார்,சப்னா”கார்த்திகேயன்
மாவட்ட செயலாளர்கள் தம்பு ராஜ்,சிட்கோ சிவா, பிரபு, தாமரை கண்ணன் மற்றும் ,மகளிர் அணியினர், நகர செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள்,வட்ட செயலாளர் கள் சார்பு அணியினர் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும்,மத்திய அரசு இச்சட்டங்களை திரும்பி பெறவில்லை என்றால் மக்கள் நீதி மைய்யத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு டெல்லி செல்வோம் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க