• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் நீதி மைய்யத்தினர் ஆர்ப்பாட்டம்

December 8, 2020 தண்டோரா குழு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் விரோத சட்டங்களை கண்டித்தும் அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக கடுங்குளிர் என்றும் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோவை மாவட்ட மக்கள் நீதி மைய்யத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மத்திய அரசை கண்டித்தும் விதமாக கோசங்கள் எழுப்பியவர்கள் இதில் மத்திய அரசு உடனடியாக இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில மாநில பொதுகுழு உறுப்பினர் தங்கவேல்,மாநில மண்டல அமைப்பாளர் ரங்கநாதன்,மாநில செயலாளர் விவசாய அணி டாக்டர் மயில்சாமி செய்தி மற்றும் ஊடகம் துனை செயலாளர் பங்கஜ் சுரபி மாநில மண்டல இளைஞர் அணி துனை செயலாளர் பிரவீண்,மாநில துனை செயலாளர் வழக்கறிஞர் அணி உதயகுமார்,சப்னா”கார்த்திகேயன்
மாவட்ட செயலாளர்கள் தம்பு ராஜ்,சிட்கோ சிவா, பிரபு, தாமரை கண்ணன் மற்றும் ,மகளிர் அணியினர், நகர செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள்,வட்ட செயலாளர் கள் சார்பு அணியினர் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும்,மத்திய அரசு இச்சட்டங்களை திரும்பி பெறவில்லை என்றால் மக்கள் நீதி மைய்யத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு டெல்லி செல்வோம் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க