• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

மத்திய அரசின் புதிய ஹால்மார்க் முத்திரைக்கு எதிர்ப்பு தெரவித்து கோவையில் தங்கநகை வியாபாரிகள் போராட்டம்

August 23, 2021 தண்டோரா குழு

மத்திய அரசின் புதிய ஹால்மார்க் முத்திரைக்கு எதிர்ப்பு தெரவித்து கோவையில் தங்கநகை வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

ஆபரண தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வமான முத்திரையாக ஹால்மார்க் உள்ளது. இந்தியதர நிர்ணய அமைவனத்தால் கடந்த 2000 – ம் ஆண்டு முதல், ஆபரணம் வாங்குவோர்,மாற்றுக்குறைவான தங்க நகைகளை வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்க இந்த முத்திரை பயன்படுகிறது.

இந்நிலையில் இதில்,உள்ள முறைகேடுகளை தடுக்க,தங்க நகைகளை விற்கும்போது ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கி மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தது.இந்த புதிய விதிமுறை கடந்த ஜூன் மாதம் 16 – ந் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில்,இந்த விதிமுறையை தங்க நகை விற்பனையாளர்கள் எதிர்த்து வந்தனர்.

இந்த நிலையில், புதிய ‘ஹால்மார்க்’ விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தங்க நகை கடைகள் காலை 9:00 முதல், 11:30 மணி வரை மூடப்பட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் புதிய ஹால்மார்க் முத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயமுத்தூர் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது.இதனால் கோவையின் முக்கிய பகுதிகளான பெரியகடை வீதி, கிராஸ்கட் சாலை,நூறடி ரோடு போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து நகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து,கோயமுத்தூர் ஒருங்கிணைந்த பொற்பொல்லர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரகுநாதன் சுப்பையா கூறுகையில்,

இந்திய தர நிர்ணய ஆணையம், நகை கடைகள் வாயிலாக விற்கப்படும் தங்க நகைகளுக்கு, இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.நகைகளில் ஹால்மார்க் முத்திரையை எதிர்க்கவில்லை; வரவேற்கிறோம். ஆனால், ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டு வர வேண்டும் என்பதைத் தான் எதிர்க்கிறோம். ஏற்கனவே கொரோனா காலத்தில் பொற்கொல்லர்கள் பாதிப்படைந்த நிலையில்,இது மேலும் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.

பேட்டியின் போது கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொருட்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தண்டபாணி ராஜ்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்

மேலும் படிக்க