• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரையை விட திருச்சி பொதுக்கூட்டம் இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் – கமல்

February 24, 2018

மதுரையை விட திருச்சி பொதுக்கூட்டம் இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மதுரையில்(பிப் 21)அன்று தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.இதனையடுத்து அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் ஏப்ரல்.4ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கட்சி உறுப்பினர்களுக்கு கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதில், கறை வேட்டி கட்ட வேண்டாம் எனவும், அனைத்து மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த இடத்திலும் காவல்துறையினரின் உத்தரவை மீறி பேனர் வைக்கவோ,விளம்பரம் செய்யவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க