• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

March 1, 2018 தண்டோரா குழு

மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். ரவுடிகளை சரண்அடையுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். அப்போது, ரவுடிகள் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

 

மேலும் படிக்க