• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுக்கரையில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை

June 8, 2019 தண்டோரா குழு

கால்நடைகளை தாக்கும் சிறுத்தை. கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மதுக்கரை வனச்சரகம் காந்திநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்தது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் 2 நாய்களை அடித்து இழுத்து சென்றது. அதே போல் 5 க்கும் மேற்பட்ட ஆடுகளையும் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதியில் மக்கள் செல்லவே அச்சப்பட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள மலையில் குட்டிகளுடன் சிறுத்தை இருப்பதையும் சிலர் கண்டனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் மனு ஒன்று அளித்தனர். அதில் கால்நடை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்ததாக உள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் காந்திநகர் பகுதியில் தற்போது சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூண்டுக்குள் ஆடு கட்டி வைக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்க கூடிய ஆடுக்கும் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் கூண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க