• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்!

April 3, 2017 தண்டோரா குழு

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2009 ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மதிமுக பொதுச்செயளாளர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில்இன்று விசாரணைக்கான வந்தது. அப்போது , வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் வைகோ ஜாமீனில் செல்ல விருப்பம் இல்லை என்றதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், என்னை யாரும் சிறையில் சந்திக்க வரக்கூடாது, போராட்டம், ஆர்ப்பாட்டம் என எதையும் செய்யக்கூடாது என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் “இனபடுகொலை குறித்து இன்றைய இளைஞர்களுக்கு தெரியாதது வேதனை அளிக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க