• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணியகாரம்பாளையத்தில் சிறப்பு தூய்மைப்பணிகள் – மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைப்பு

March 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்19க்குட்பட்ட மணியகாரம்பாளையத்தில் சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவங்கி வைத்து ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம், பாலமுருகன் நகர், அசோக் நகர், அம்மன் நகர், அசோக் நகர் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பூங்காக்களை சீரமைத்து அப்பகுதியில் ஆர்வமுள்ள குடியிருப்போர் நலச்சங்கத்திடம் வழங்கிடவும், . சீரான குடிநீர் விநியோகம் செய்யுமாறு உதவி பொறியாளர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியின் சாலையோரங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றுதல், தேங்கிய குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வடிகால் கால்வாயில் தேங்கியுள்ள செடி கொடிகளை அகற்றிடவும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் சிறப்புத்தூய்மைப்பணியின் மூலம் சேகரமாகும் குப்பைகளை உடனடியாக வாகனம் மூலம் ஏற்றி அப்புறப்படுத்த வேண்டும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது 31வது வார்டு கவுன்சிலர் வைரமுருகன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க