• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மட்டமானது அண்ணாமலை அரசியல் அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்

June 18, 2022 தண்டோரா குழு

கோவையில் சாலை பணிகள், மேல்நிலை தொட்டி கட்டுதல், நகர் நல மையம் உள்ளிட்ட திட்ட பணிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

அவர் பெரிய தடாகம் பகுதியில் கோவை-ஆனைகட்டி சாலையில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணி, கோவை மேற்கு வார்டு 31ல் நேரு வீதி பகுதியில் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் 28 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டுதல் பணி, ரூ.14 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் வாலாங்குளம் புறவழிச் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி, டவுன் ஹால் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 19.8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட ரூ.38.6 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரின் சீரிய முயற்சியால் 143 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு குறைந்த விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வளவு டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது என அண்ணாமலையிடம் கேட்டு சொல்லுங்கள்.

வேலை வெட்டி இல்லாதவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் மட்டமான அரசியல் செய்கிறார். ஒருபோதும் பாஜக.,வினரின் கனவு பலிக்காது. நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் நமது முதல்வர் ஸ்டாலின் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க