• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மசினகுடியில் யானை மீது டயரில் தீ வைத்து வீசிய இருவர் கைது !

January 22, 2021 தண்டோரா குழு

கடந்த ஒரு மாதமாக மசனகுடி வனப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்தது.இதையடுத்து, வனத்துறையினர் யானைக்கு கும்கி யானைகள் மூலம் சென்று மருத்துவக் குழுவுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் காயப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 கும்கி யானைகளை கொண்டு காயப்பட்ட யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது வழியில் யானை பரிதாபமாக யானை உயிரிழந்தது.

இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் யானையை முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து 3 கும்கி யானைகளை கொண்டு காயப்பட்ட யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது வழியில் யானை பரிதாபமாக யானை உயிரிழந்தது.

இந்நிலையில் யானை குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் பொழுது அதை டயர் மூலம் நெருப்பு வைத்து துரத்தும் காட்சியும் பின்பு யானையின் மீது அந்த நெருப்பை வீசியதும் யானை காதுப் பகுதியில் மளமளவென பிடித்த தீ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நீலகிரி மாவநல்லா பகுதியில் டயரில் தீ வைத்து காட்டு யானையின் மீது வீசிய சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன், பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க