• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மசாஜ் செய்ய முடியாதா? தகராறில் கோவையில் பெண் மீது கத்தி குத்து

June 17, 2022 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் மினிமோள் (43).இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.இவரது வீடு மசாஜ் சென்டர் அருகே உள்ளது.இந்நிலையில் இவரது வீட்டிற்கு சென்ற கெளசிக் என்பவர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் மினிமோளை மசாஜ் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.அதற்கு அவர் மசாஜ் சென்டர் வருமாறு கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த கெளசிக் மற்றும் அவரது நண்பர் மினிமோளை கத்தியால் தாக்கியுள்ளனர்.அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் உதவிக்கு வந்துள்ளனர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் மினிமோள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க