• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பத்ம பிரியா விலகல் !

May 13, 2021 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பத்ம பிரியா விலகுவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மதுரவாயல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் பத்ம பிரியா.இவர் அக்கட்சியின் சுற்றுசூழல் பிரிவு மாநில பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில்,இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பத்ம பிரியா விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க