• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் கோவை வந்திறங்கிய 10 இளைஞர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

March 21, 2020 தண்டோரா குழு

மகாராஷ்டிராவில் இருந்து கோவை வந்திறங்கிய 10 இளைஞர்களுக்கு ரயில் நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 70ற்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் சாதாரண நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பயணிகளும் சனி,ஞாயிறு மற்றும் விழா நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் வருகின்றனர். இப்படியிருக்க உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கோவை ரயில் நிலையத்தில் வரும் பயணிகளுக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கோவை ரயில்வே நிலையத்தில் கொரோனா கண்காணிப்பை சுகாதாரத் துறையினரும் மருத்துவ குழுவினரும் ரயில்வே போலீசாரும் இணைந்து செய்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று பெங்களூர்-எர்ணாகுளம் இரயிலில் கோவை வந்த 10 மஹாராஷ்டிரா இளைஞர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.இந்தப் பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தில் மருத்துவ குழுவினர் மகாராஷ்டிரா இளைஞர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். மேலும் ரயில் நிலையத்தில் பிரத்தியேக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அவசர நிலையில் வரும் பயணிகளை காலதாமதமாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழல் உள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க