• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம்

July 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக நவநீதகிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இருந்து புகார்களை பெற்று அதனை பரிசீலித்து 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரச்னை நடக்கும் இடத்திலேயே விசாரணை நடத்தலாம்.

வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஊதியத்தை தாமதமாக வழங்குதல் தொடர்பான பல குறைகளை தானாக முன்வந்து நடவடிக்கைகளை குறைதீர்ப்பாளர் மேற்கொள்வார். மாவட்ட குறைத்தீர்ப்பாளர் நவநீதகிருஷ்ணனை கைபேசி எண் – 9443474364 மூலமாக அணுகலாம். எழுத்து வடிவிலான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் குறைத்தீர்ப்பாளரிடம் நேரில் ஒப்படைக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க