• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை !

June 8, 2021 தண்டோரா குழு

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின். இவர் மீது ரூ.60 லட்சம் பண மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கு 2015-ஆம் ஆண்டு முதல் டர்பன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க