• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகனின் பிறந்த நாளுக்காக உலகின் மிக பெரிய கேக் தயாரித்த தந்தை

September 13, 2017 தண்டோரா குழு

லண்டனைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய 3 வயது மகனின் பிறந்த நாளுக்காக 3௦௦ கிலோ எடையுடைய ஸ்பாஞ் கேக்கை(Sponge Cake) தயாரித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் லண்டனைச் சேர்ந்த ஸ்டீபன் ஆக்ஸ்போர்டு என்பவர்,ஆக்ஸ்போர்டு பேக்கரியில் பணியாற்றி வருகிறார்.இவர் தனது மூன்று வயது மகன் சாமுவேலின் பிறந்த நாளுக்கு, ஆக்ஸ்போர்டு பேக்கரி ஊழியர்கள் உதவியுடன் 3௦௦ கிராம் எடையுடைய ஸ்பாஞ் கேக்கை(Sponge Cake) தயாரித்துள்ளார்.

லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஸ்டுமினிஸ்டர் நியுட்டன் ஆண்டு விழாவில்,இந்த கேக்கை மக்களிடம் காண்பித்தார். இந்த விழாவிற்கு வந்திருந்த மக்களின் முன்னிலையில், தனது மகன் சாமுவேலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.

ஸ்டீபன் உருவாக்கிய இந்த கேக் சுமார் 5 அடி நீளமும், 8.5 அடி உயரம் இருந்தது. இந்த கேக்கை தயாரிக்க ஒரு நாள் முழுவதும் ஆனதாக கூறினார்.

மேலும் இந்த கேக் உலகின் மிக பெரிய கேக் என்ற சாதனையை படைத்துள்ளது.இதை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஏற்றுக்கொள்ள அந்நிறுவன அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதாக, ஸ்டீபன் தெரிவித்தார்.

மேலும் படிக்க