January 25, 2021
தண்டோரா குழு
‘ப்ரணா’ புதிய எலக்ட்ரிக் பந்தய வகை பைக் அறிமுகம்-கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி முதல் விநியோகத்தை துவக்கி வைத்தார்.
பந்தய வகை மோட்டார் சைக்கிளாக ப்ராணா தற்போது சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு ஏற்படாத வகையில் புதிய எலக்ட்ரிக் பந்தய வகை பைக் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுகம் மற்றும் முதல் விநியோகம் துவக்க விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு புதிய எலக்ட்ரிக் பந்தய வகை பைக்கின் விழிப்புணர்வு குறித்து பேசினார். அதனை தொடர்ந்து முதல் விநியோகத்தை துவக்கி வைத்தார்.
ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (பி) லிமிடெட், இந்தியாவில் வெற்றிகரமான ஸ்டார்ட் அப் ஆக உள்ளது. கோவையில் ஏற்கனவே உள்ள உற்பத்தி தொழிற்சாலையை மேம்படுத்தி, தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த தொழிற்சாலையை தொடங்கியுள்ள கோவையை சேர்ந்த பொறியாளர் மோகன்ராஜ் ராமசாமி, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவின் டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இந்த நிறுவனம், தற்போது ஒரு கம்பீரமிக்க மின்சார வாகனமாக, பந்தய வகை மோட்டார் சைக்கிளாக ப்ராணா-வை, முதல் தயாரிப்பாக அறிமுகம் செய்துள்ளது.
பாரத் நிலை மாசுக்கட்டுப்பாட்டில் ப்ராணா (பிஎஸ் இன்பினிட்டி) யில் பூஜ்ஜியமாக பெற்றுள்ளது. புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள், பல்வேறு காரணங்களால் பல்வேறு வகைகளில் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. மின்சார வாகனம் என்பதால், சுற்றுச் சூழல் மாசுபடுத்தாத வாகனமாகவும், பயணிப்போரின் பாதுகாப்பாகவும், காற்று தடையை குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. பந்தய திறன் முறையில் மணிக்கு 123 கி.மீ.,வேகத்தில் செல்லும். நான்கே நொடியில் மணிக்கு 60 கி.மீ.,வேகத்தை எட்டும்.
ஏற்கனவே கோவையில் சிறந்த அனுபவங்களை கொடுத்து வரும் ப்ரணா, விரைவில் மதுரை, திருப்பூர், பாண்டிச்சேரி, கோழிக்கோடு மற்றும் திண்டுக்கல், பெங்களூரு நகரங்களில் தாயாரிப்பு வசதிகளுடன் அறிமுகமாகவுள்ளது. ப்ரணா வாகனத்தை பெற ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். இந்த வாகனத்தின் ஆன்ரோடு விலை ரூ.2 முதல் 2.2.5 லட்சமாக இருக்கும். இதன் மின்சார மோட்டார் 35என்எம் திறனையும், 160 கிலோ எடையையும் கொண்டதாக உள்ளது.