• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை – தமிழக தேர்தல் அதிகாரி

March 30, 2019 தண்டோரா குழு

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நேற்று இரவு திடீரென வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுனர். அப்போது, துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் இருந்தனர்.

இந்நிலையில்,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வாக்களிக்க பணம் கொடுத்ததாக 833 புகார்கள் வந்துள்ளன. அதில் 37 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது எனக் கூறினார்.

மேலும் படிக்க