• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

July 17, 2018 தண்டோரா குழு

ஆறுமுகத்தைக் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை அடுத்த நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாடியில் இருந்த விழுந்து மாணவி லோகேஷ்வரி உயிரிழந்தார். இந்த வழக்கில் போலி பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், ஆறுமுகத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி ஆலந்துறை காவல்துறையினர் கோவை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகத்தைக் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க