• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போராட்டம் எதிரொளி – கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம் பயணிகள் அவதி

January 8, 2020

விலை வாசி உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் எதிரொளி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதிகுள்ளாகினர்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி கோவையில் இன்று சாலை மறியல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளாவிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதன் எதிரொளியாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் உக்கடம் பேருந்து நிலையம் வெரிச்சோடி காணப்பட்டது. இதனால் சிறு வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபட்டனர். பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

மேலும் படிக்க