• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போத்தனூர், சுந்தராபுரம் ஆகிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பு

April 18, 2020 தண்டோரா குழு

கோவை போத்தனூர் சுந்தராபுரம் ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் அதிக பாதிப்புகள் உள்ள பகுதி ஹாட்ஸ்பார்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோவை போத்தனூர் பகுதியில் முக்கிய சாலைகள், தெருக்கு ஹாட்ஸ்பார்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது. அங்கு தினமும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பகுதியில் அதிவிரைவு படையின் வஞ்ரா வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் மினி ஆட்டோ வாகனங்கள் மூலம் ஒலிப்பெருக்கியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெருமளவு இங்கு வாகன ஓட்டங்கள் குறைந்துள்ளது. இருப்பினும் சுந்தராபுரம் , சங்கம் வீதி, போத்தனூர், உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க