• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போதையில் மயங்கிய விமானி சிறையில் அடைப்பு

January 3, 2017 தண்டோரா குழு

அளவுக்கு அதிகமாக மது அருந்தி விமானி அறைக்குள் (காக்பிட்) மயங்கி விழுந்த விமானியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கனடா நாட்டில் விமானம் புறப்படும் நேரத்தில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விமான அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

மேற்கு கனடாவில் உள்ள கல்காரி விமான நிலையத்திலிருந்து மெக்ஸிகோவிற்கு 1௦௦ பயணிகளுடன் போயிங் 737 ரக விமானம் புறப்படத் தயாரானது. இந்நிலையில் விமானத்தை ஓட்ட வேண்டிய 37 வயதான விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி, விமானி ஓட்டிகளின் அறைக்குள் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே விமான ஊழியர்கள் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளனர். அதிகாரிகள் உடனே அங்கு விரைந்து வந்து, குடிபோதையில் கிடந்த விமானியை விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.

அவரைச் சோதனை செய்த போது அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மற்றொரு விமானியைக் கொண்டு அந்த விமானம் இயக்கப்பட்டது. விமானச் சட்டங்களைச் சரியாக பின்பற்றத் தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட அந்த விமானி சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க