• Download mobile app
14 Jan 2026, WednesdayEdition - 3626
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் பந்த் அறிவிப்பு

January 19, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், லாரிகள் சம்மேளனம், கால்டாக்சி ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பந்த் அறிவித்துள்ளன.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்குப் பல தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்தச் சூழலில் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை பந்த் அறிவித்துள்ளன. இதில், பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.

இதே போல் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கால் டாக்சி, ஆட்டோ, வேன் ஆகியவையும் அன்றைய தினம் இயங்காது என அதன் ஓட்டுநர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், வெள்ளிக்கிழமை போக்குவரத்தில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவையில், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, வெள்ளிக்கிழமை லாரிகள் இயங்காது என கோவை மாவட்ட லாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால், அத்யாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் வாகனங்கள் இயங்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க