• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாரசந்தைகளை மாற்ற வேண்டும் தன்னார்வர்கள் கோரிக்கை

January 8, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் ஆட்சியர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஹோட்டல்கலில் விலைபட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கோவையில் அனைத்து தெருக்களிலும் பெயர்பலகை வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செயப்பட்ட நீர்வழி ஓடைகள் மீட்கப்பட வேண்டும். அன்னூர், சூலூர் வட்டங்களில் நில அளவை செய்ய தொகை செலுத்தினாலும் உடனடியாக நில அளவை செய்வதில்லை. மாநில மற்றும் மாநகராட்சி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாரசந்தைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். திருச்சி சாலையில் வசந்தாமில் முதல் ஒண்டிப்புதூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறபடுத்த வேண்டும். நீலம்பூரில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலர் லோகு உள்ளிட்ட பல்வேறு தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க