• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் மேலும் 3 பேர் சிக்கியது எப்படி?

January 6, 2021 தண்டோரா குழு

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாலை இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மூவரையும் கோவை மத்திய சிறையில் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். இதற்கிடையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில், ஏற்கனவே இரண்டு பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் ஒருவர்நீதிபதியிடம் அளித்த வாக்குமூலம் தான் இவர்கள் மூவரும் சிறை செல்ல காரணமாக இருந்தது. அவர் தனது வாக்குமூலத்தில் கைதான மூவரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அதை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் படிக்க