• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

May 21, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை விட பல மடங்கிற்கு மேல் கட்டணத்தை வசூலிப்பதாகவும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க கோரி, மானவர்கின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 % இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமும் கல்வி கட்டணத்தை அனைத்து தனியார் பள்ளிகளிலும் வசூலிக்கப்படுவதாகவும் எனவே மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் , தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டண பட்டியலை பள்ளியின் முகப்பில் பெற்றோர் மாணவர்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டும் இதுநாள் வரை தனியார் பள்ளிகள் அதனை கடைபிடிப்பதில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க