• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சியில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தி கேட்டு மாரடைப்பால் உயிரிழந்த திமுக பிரமுகர்

July 30, 2018 தண்டோரா குழு

கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரா.அம்சகுமார் (62). திமுகவின் நீண்டகால தொண்டரரான இவர் குள்ளக்காபாளையம் 4-வது வார்டு அவைத்தலைவராக இருந்து வந்தார். திமுக சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக வீட்டிலிருந்து கருணாநிதி உடல் நலம் குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தொலைக்காட்சியில் கருணாநிதியின் உடல் நலிவுற்ற செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அம்சகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்ச குமார் உடலுக்கு பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றியச் செயலாளர் கோ.பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மோகன் வீரகுமார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த அம்சகுமாருக்கு நாகரத் தினம் என்ற மனைவி, மாரிமுத்து என்ற மகன், உமா மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க