• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தி கேட்டு மாரடைப்பால் உயிரிழந்த திமுக பிரமுகர்

July 30, 2018 தண்டோரா குழு

கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரா.அம்சகுமார் (62). திமுகவின் நீண்டகால தொண்டரரான இவர் குள்ளக்காபாளையம் 4-வது வார்டு அவைத்தலைவராக இருந்து வந்தார். திமுக சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக வீட்டிலிருந்து கருணாநிதி உடல் நலம் குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தொலைக்காட்சியில் கருணாநிதியின் உடல் நலிவுற்ற செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அம்சகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்ச குமார் உடலுக்கு பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றியச் செயலாளர் கோ.பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மோகன் வீரகுமார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த அம்சகுமாருக்கு நாகரத் தினம் என்ற மனைவி, மாரிமுத்து என்ற மகன், உமா மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க