• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்கள் போகியை விழிப்புணர்வுடன் கொண்டாட வேண்டும் – இந்திய மருத்து சங்கம்

January 13, 2020

போகியில் பொருட்களை எரிக்க கூடாது என கடந்த ஆண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துயதால், போகி அன்று சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்ததாக இந்திய மருத்து சங்கம் ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை மற்றும் மாசுகாட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

அப்போது பேசிய ஐ.எம்.ஏ செயலாளர் துரைக்கண்ணன்,

who அறிக்கையின் படி மாசு காரணமாக ஆண்டிற்கு 7 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் ,அதில் 1.5 மில்லியன் பேர் , 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் என தெரிவித்தார். போகியில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்றவற்றை எரிப்பதால், சுவாச கோளாறு , ஆஸ்துமா, தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் போகியை விழிப்புணர்வுடன் கொண்டாட வேண்டும் என வலியுறித்தினார்.

தொடர்ந்து பேசிய ஐ.எம்.ஏ நிர்வாகி கார்திக் பிரபு,

கடந்த 2019 ஆம் ஆண்டும் போகியில் எந்தெந்த பொருகளை எரிக்க கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக கடந்த ஆண்டு மாசு குறைந்ததாகவும், இதனால் ஆண்டு தோறும் போகியின் போது சுவாச கோளாறு உள்ளிட்ட மூச்சு பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 சதவிகிதம் குறைந்தாகவும் கூறினார். இந்த ஆண்டும் மக்கள் போகியன்று பழைய பொருட்களை எரிகாமல் முறையாக கையாள வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க