• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் – மாநகராட்சி கமிஷனர்

April 30, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி, ரத்தினகரி ரோடு, ஏ.எம்.டி நகர், வருமான வரித்துறை ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் 32வது வார்டுக்குட்பட்ட செங்காளியப்பன் நகர் ஆகிய பகுதிகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள வீடுகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவிட வேண்டும். பொதுமக்கள் அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சேரன்மாநகரில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரி மற்றும் சரவணம்பட்டி சாலையில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரிகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டதற்காக இரு பேக்கரிகளையும் மூட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முருகன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க