• Download mobile app
10 Aug 2025, SundayEdition - 3469
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள்

January 12, 2022 தண்டோரா குழு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையில் மிக முக்கிய பண்டிகையானது பொங்கல் திருநாள்.தை மாதத்தில் வரும் இந்நாளில் தமிழர்கள் சூரிய பகவானிற்கு நன்றி சொல்லும் விதமாக மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக கோவை நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் 14ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.வளாகம் முழுவதும் கரும்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய இசையுடன் மண்பானையில் பொங்கல் வைத்து குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

இதில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் விஜயகுமார்,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கௌதமன், துணை தலைவர் கண்ணன், இணைச்செயலாளர் நிர்மலாதேவி, கலையரசன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க