• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொங்கலுக்கு பூவரத்து அதிகரிப்பு மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி

January 14, 2020

இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவின் காரணமாக பொங்கலுக்கு பூவரத்து அதிகரித்து இருப்பதால் மலர் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை பூமார்க்கெட் பகுதியில் பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள், இஞ்சி. பூ, மண்பானை. மாடுகளுக்கு தேவையான கயிறு உள்ளிட்ட அலங்கார பொருட்கள் மற்றும் பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள நகர,மற்றும் கிராமப்புற பொதுமக்கள், பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க அந்த பகுதியில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பூமார்க்கெட் மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் அய்யப்பன் இந்த வருட பொங்கல் வியாபாரம் குறித்து பேசுகையில்,

வழக்கத்தை விட இந்த வருட பொங்கல் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும்,இந்த வருடம் மழைப்பொலிவு நல்ல முறையில் இருந்ததால், பொங்கல் பண்டிகைக்கு தேவையான செண்டுமல்லி, செவ்வந்தி போன்ற பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதாகம்,அதனால் விலை குறைவாக இருப்பதால் வாடிக்காளர்களும் அதிகம் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்து அவர்,பனிப்பொழிவின் காரணமாக,மல்லி,ஜீதி,முல்லை போன்ற மலர்களின் விலை மட்டுமே அதிகம் இருப்பதாகவும்,மற்ற பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மா, வாழை,பாணை,மற்றும் பூஜை பொருட்கள் என அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படும் பூமார்க்கெட் பகுதியில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அந்த பகுதியே களை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க