• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி ஆஜராக தடை

May 31, 2018 தண்டோரா குழு

பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ல் ரஜினிகாந்த் பெயரைச்சொல்லி பைனான்சியர் போத்ராவிடம் இயக்குநர் கஸ்தூரிராஜா 65 லட்சம் கடன் பெற்றதாகவும் கடன் தொகையை காசோலையாக திருப்பிக் கொடுத்தபோது வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எதிரான பைனான்சியர் போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கில், ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் தன் பெயரை தவறாக பயன்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனால்,ரஜினிகாந்த் மீது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து ரஜினிக்கு எதிராக போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.அதில் கஸ்தூரிராஜாவுக்கு எதிராகதான் வழக்கு தொடர்ந்ததாகவும், ரஜினிகாந்த் தனக்கு எதிராக தவறான தகவல்களை கூறுவதாகவும் போத்ரா தெரிவித்திருந்தார்.இதையடுத்து, அவதூறு வழக்கில் வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினி காந்த்துக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ரஜினி ஆஜராக விலக்கு அளித்துள்ளது.

மேலும் படிக்க