• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டவரின் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளையன் !

June 13, 2018 தண்டோரா குழு

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் RT நகர் பகுதியில் பிரேமலதா தனது சகோதரர் லோகித் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வார இறுதி நாளன்று சொந்த ஊரான கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதாக கூறி பிரேமலதா ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு ஊருக்கு கிளம்பிச் சென்றுள்ளார். கோவில் சென்று வீட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது வீடே அலங்கோலமாக இருந்துள்ளது.

வாசலில் நின்றிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது வீட்டில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை 57,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றதைக் கண்டு பிரேமலதா அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து RT நகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகரில் நான் பதிவு செய்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்யை பார்த்த யாரோ ஒருவர் தான் இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக பிரேமலதா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்காததால் கொள்ளையர்கள் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வாய்ப்பாக மாறியுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க