• Download mobile app
09 Jul 2025, WednesdayEdition - 3437
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேஸ்புக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசிய பெண் கைது

June 2, 2018 தண்டோரா குழு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மணப்பாறை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யாதேவி.இவர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை பற்றி அவதூறாகவும் ஆபாச வார்த்தைகளிலும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனால் பாஜக நிர்வாகிகள் பலர் சூர்யா தேவிக்கு எதிராக புகார் அளித்தனர். தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி காளிதாஸ் என்பவர் சென்னை போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து,சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி திருச்சி பெண் சூர்யாதேவி வெளியிட்டது என்பதை கண்டறிந்தனர்.பின்னர்,வடபழனி போலீஸார் உதவியுடன் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.மேலும்,இவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையிலும் ஆபாசமாக பேசுதல் பிரிவின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க