• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக்கில் தகாத வார்த்தை பேசிய நபரை நாட்டை விட்டே வெளியேற வைத்த பெண் பத்திரிகையாளர்

April 12, 2017 தண்டோரா குழு

பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வந்த நபரின் விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டு அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வைத்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பிரபலமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர் ‘ரானா அயூப்’ என்ற பெண்மணி. அவருடைய பேஸ்புக் பக்கத்திற்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தகாத வார்த்தைகளால்ஒருவர் குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ரானா அயூப் இதை பெரிய தொந்தரவாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல இது போன்ற குறுஞ்செய்திகள் தொடர்ந்து வரவே, இதற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என்று நினைத்தார்.

இதையடுத்து, அந்த நபர் தனக்கு பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளால் அனுப்பிய குறுஞ்செய்திகளை ஸ்க்ரீன் சாட் எடுத்து “இதை தான் நான் தினம் தினம் அனுபவிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

பின்னர், சில நாட்கள் கழித்து தனக்கு மெசேஜ் அனுப்பிய நபரின் பெயர் பாலச்சந்திரன் லால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்துக்கொண்டு இருக்கிறார்.அவர் “ஷாடி அல் ரேபாய் “என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதை அறிந்த ரானா அயூப் அந்த நிறுவனத்தில் புகார் செய்தார்.இதையடுத்து, பாலச்சந்திரன் லால் பணியாற்றி வந்த நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டது.

இதனைத்தொடர்ந்து “பாலச்சந்தினுடைய விசாவும் திரும்பப்பெறப்பட்டது.அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்” என்று ரானா அயூப் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அயூபின் இந்த தைரியமான செயலை அறிந்த மக்கள் அவரை மனமார பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க