• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரூர் பட்டி விநாயகர் கோவிலருகே 150 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது

June 26, 2021 தண்டோரா குழு

பேரூர் ஆற்றுவழி பட்டி விநாயகர் கோவில் அருகில் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது.நேற்று,இப்பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு பொக்லைன் மீது விழுந்த மரம், சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து,பேரூர் தாசில்தார் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும்,ரோட்டின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த, தொண்டாமுத்தூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு ஊர்தி குழுவினர் சாலையின் குறுக்கே விழுந்து இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் படிக்க