• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரூர் பட்டி விநாயகர் கோவிலருகே 150 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது

June 26, 2021 தண்டோரா குழு

பேரூர் ஆற்றுவழி பட்டி விநாயகர் கோவில் அருகில் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது.நேற்று,இப்பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு பொக்லைன் மீது விழுந்த மரம், சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து,பேரூர் தாசில்தார் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும்,ரோட்டின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த, தொண்டாமுத்தூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு ஊர்தி குழுவினர் சாலையின் குறுக்கே விழுந்து இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் படிக்க