• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: மக்கள் தகவல் தரலாம் அதிகாரி சந்தானம் அறிவிப்பு

April 19, 2018 தண்டோரா குழு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தகவல் தெரிவிக்கலாம் என ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் அறிவித்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் வற்புறுத்தினார்.இது தொடர்பாக நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியானது.

இதையடுத்து புகாரின் பேரில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில்,இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று தனது விசாரணையை தொடங்கினார்.இதையடுத்து மதுரை காமராஜர் பல்கலை.,ஆவணங்கள் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர்,நிர்மலாதேவி விவகாரம் குறித்து மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை விசாரணை அதிகாரி சந்தானம் முன்னிலையில் அரசினர் மாளிகையில் இன்று ஆஜரானார்.
இந்நிலையில்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 21, 25, 26 ஆம் தேதி ஆகிய 3 நாட்களிலும் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் பகல் 1.30 வரை நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக தகவல் தரலாம்விசாரணை அதிகாரி சந்தானம் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க