April 19, 2018
தண்டோரா குழு
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி மற்றும் டிஎஸ்பி முத்து சங்கர லிங்கம் தலைமையில் இந்த விசாரணைக்கு குழுக்கள் செயல்படவுள்ளன. இதற்கிடையே தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளார்.