• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

July 12, 2018 தண்டோரா குழு

நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,கருப்பசாமி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்,செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் அதுவரை யாருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,நிர்மலாதேவி விவகாரத்தில் செப். 10ம் தேதிக்குள் சிபிசிஐடி இறுதியான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்,இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால்,குற்றவாளிகள் மூவரையும் சிறையில் இருந்து விடுவிக்காமல் விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க