• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேராசிரியர் உள்பட 2 பேர் தற்கொலை

February 24, 2022 தண்டோரா குழு

அன்னூர் மூலகுரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.‌ கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி (24).இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத நிலையில் காயத்ரி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே காயத்ரிக்கும் அன்னூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவருடன் காயத்ரி வெகுநேரம் செல்போனில் பேசி வந்துள்ளார்.‌ இதை காயத்திரியின் குடும்பத்தினர் கண்டித்தனர்.‌ இதனால் விரக்தி அடைந்த காயத்ரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (27). இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.இவருக்கு 10 நாட்களுக்கு முன் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டது.‌ சிகிச்சை முடிந்த பின்னரும் இவரது உடல்நிலை தொடர்ந்து பலவீனமாக இருந்து வந்துள்ளது.இதனால் விரக்தியில் இருந்த அபுதாகிர் கோவை காரமடை வந்துள்ளார். கட்டாஞ்சி மலைப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் அபுதாகிர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.‌ அப்போது இவர் கட்டாஞ்சி மலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். தனக்கு பிடித்த இடத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் அவர் வந்திருப்பதாக தெரிகிறது. காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க