• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரறிவாளனை கருணை கொலை செய்யுங்கள்: தாயார் அற்புதம்மாள் உருக்கம்

June 15, 2018 தண்டோரா குழு

சிறையில் இருக்கும் பேரறிவாளனை கருணை கொலை செய்து விடுமாறு மத்திய,மாநில அரசுகளிடம் வலியுறுத்த உள்ளதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு,26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்,முருகன்,சாந்தன்,ஜெயகுமார்,ராபர்ட் பயஸ்,ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.இந்நிலையில்,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறும்போது,

பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்யுங்கள்.தினம் தினம் துடிப்பதை விட மத்திய அரசே கருணை கொலை செய்து விடலாம்.இந்த விஷயத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்.பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது.எங்களை குடும்பத்துடன் கருணை கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க