• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேட்டியை அதிக நேரம் ஒளிப்பரப்பினால் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்

April 3, 2017 தண்டோரா குழு

வேட்பாளர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் அதிக நேரம் ஒளிப்பரப்பினால் தேர்தல் செலவாக கருதப்படும் என்று ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை, காவல் ஆணையாளர் கரன் சின்ஹாவும் தேர்தல் அதிகாரி கார்த்திகேயனும் சந்தித்து பேசினர்.

அவர்கள் பேசியதாவது;

“வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும். வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களிக்க முடியாது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தொகுதியின் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடத்தப்படும். தேர்தல் தொடர்பாக இதுவரை வந்த 145 புகார்களில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் இரண்டாம் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வேட்பாளர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் அதிக நேரம் ஒளிப்பரப்பினால் தேர்தல் செலவாக கருதப்படும். அத்தொகை வேட்பாளர்களின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஆர்.கே.நகரில் ரூ.7 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,694 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்

மேலும் படிக்க