• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெற்றோர்கள் உடனே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் – கோவை அரசு மருத்துவமனை டீன் !

July 18, 2021 தண்டோரா குழு

குழந்தைகளை கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில், தற்போது 250க்கும் குறைவாக கொரோனா தொற்று இருந்து வருகிறது.இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேசமயம், கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை,அதிகளவில் தாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.அதற்கேற்ப, கோவை அரசு மருத்துவமனையில், 350 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.தவிர, கொரோனா மூன்றாவது அலையின் போது, குழந்தைகளை பராமரிப்பது குறித்த பயிற்சியும், டாக்டர்கள், நர்ஸ்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,

”கொரோனா தொற்றானது பெரும்பாலும், பெற்றோர்களிடமிருந்து தான்,குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.எனவே,பெற்றோர் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளை அதிகம் வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது.புரத சத்துகள் நிறைந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்.குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.இதுவரை, கொரோனா குழந்தைகள் பிரிவில்,யாரும் அனுமதிக்கப் படவில்லை,” என்றார்.

மேலும் படிக்க