• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரும்பான்மையான பாஜக உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப தயார் – கர்னல் பி.பி.பாண்டியன்

January 9, 2021 தண்டோரா குழு

வருகின்ற தேர்தலில் பெரும்பான்மையான பாஜக உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப தயாராக உள்ளதாக முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் கர்னல் பி.பி.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் பாஜகவின் ராணுவ பிரிவின் மாநகர மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ராணுவ பிரிவின் மாநில தலைவர் கர்னல் பி.பி.பாண்டியன்,

தமிழகத்தில் ராணுவத்துக்கு என நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது பாஜகவில் மட்டுமே,வருகின்ற தேர்தலில் பாஜகவின் பெரும்பான்மையான உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவின் மாநில செயலாளர் டி.வி. பாஸ்கரன் மற்றும் கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி ,ராஜன், காரமடை மேற்கு மண்டல தலைவர் வினோத் முன்னிலையில் புதிய தலைவர்களாக மாநகர் மாவட்ட தலைவர் கணேஷ், துணைத் தலைவர்களாக ராஜேந்திரன் கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் பாஜக தொழில் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டு புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க