• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியார் படம் போட்ட டி-ஷர்ட்டுடன் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி

March 21, 2018 தண்டோரா குழு

மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ இன்று பெரியார் உருவம் பதித்த  கருப்பு சட்டை அணிந்து  சட்டப்பேரவைக்கு வந்துள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நேற்று கேரளா வழியாக தமிழக எல்லையான செங்கோட்டை வந்தடைந்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தன.

சட்டப்பேரவையிலும் எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ரத யாத்திரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதல்வர் விளக்கமளித்தும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்-ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர்.சட்டப்பேரவையில் கூச்சல் ஏற்பட்ட நிலையில் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வான தமிமுன் அன்சாரி இரண்டு கைகளையும் உயர்த்தி ரத யாத்திரைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டதோடு,சபாநாயகர் இருக்கை முன்பு வந்து அமளியில் ஈடுபட்டார். இதனால் சட்டப்பேரவை கூட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. பின்னர் அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் படிக்க