• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியார் சிலையை உடைப்பேன் என சமூகவலைதளங்களில் பதிவிட்ட நபர் கைது

November 26, 2020 தண்டோரா குழு

பெரியார் சிலையை உடைப்பேன் என சமூகவலைதளங்களில் பதிவிட்ட நபரை கோவை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவர் தனது வாட்ஸ்அப் குழுவில் பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டு அதை சமூக வலைதளங்களிலும் பரப்பி வந்ததாக தெரிகிறது. இதைஅடுத்து அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் இதுகுறித்து மனோகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் பிரபுவை மனோகரன் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பிரபு கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மனோகரனை அழைத்து விசாரித்து உள்ளார்கள் விசாரணையில் இந்து பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவராக மனோகரன் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் பெரியார் குறித்து வாட்ஸ்அப் குழுவிலும் சமூக வலைதளங்களிலும் செய்தி பரப்பியது உண்மை என தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க