• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெயரை போட்டு போஸ்டர் அடிக்க கூட தைரியமில்லாதவர் வேலுமணி – உதயநிதி ஸ்டாலின்

October 27, 2020 தண்டோரா குழு

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக வின் அராஜக ஆட்சியை கண்டித்து திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.

கூட்டத்தினர் மத்தியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,

இந்த போராட்டம் வெறும் போஸ்டர் ஒட்டியதற்கான போராட்டம் மட்டும் கிடையாது. கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது,அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கின்றார்.தேர்தலில் மக்கள் அவருக்கு துரத்தி துரத்தி சாவு மணி அடிக்க போகின்றனர்.பெயரை போட்டு போஸ்டர் அடிக்க கூட தைரியமில்லாதவர் வேலுமணி என கூறிய அவர்,இதை விட அசிங்கமாக , சிறப்பாக எங்களுக்கும் போஸ்டர் அடிக்க தெரியும் என தெரிவித்தார்.

அடுத்த முறை போஸ்டர் ஒட்டினால் கிழிக்க மாட்டோம் எனவும், அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம் எனவும் தெரிவித்தார்.
குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டபோது அதற்கு அனுமதி மறுத்து , தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் அனுமதி கொடுத்தனர்.ஆனால் காலையில் அனுமதி மறுத்துள்ளனர். கைதுக்கு தயாராக தான் மேடைக்கு வந்தேன்.திமுக தலைவரும் இங்கே போராட்டம் நடத்த வருவதாக சொன்னவுடன், போஸ்டரை கிழித்தற்காக கைது செய்யப்பட்ட திமுகவினர் காவல் துறையினர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். எடப்பாடியின் நிழல் முதல்வராக எஸ்.பி.வேலுமணி இருக்கின்றார்.தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

கொரொனாவை வென்றெடுத்த நாயகனே என்று கோவையில் எஸ்.பி.வேலுமணி நோட்டீஸ் ஓட்டியதற்கு பின்னரே, கோவையில் கொரொனா நோய் தொற்று அதிகரித்துள்ளது. இது கொரோனாவை விட மோசமாக ஆட்சி எனவும் கடுமையாக விமர்சத்தார். அமைச்சர் வேலுமணி ஊழல் மணி என தெரிவித்த அவர், பிளிச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது எனவும் கோவையில் கே.சி.பி, ஆலயம் அறக்கட்டளை என 7 நிறுவனங்கள் வைத்து அவற்றில் மாற்றி மாற்றி டெண்டர் எடுத்து கொள்ளையடித்து இருக்கின்றனர்.1300 மதிப்பு பல்பை 6000 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்கள்.ஊழல் செய்தற்கான அனைத்து ஆதாரங்களும் ஸ்டாலினிடம் இருக்கின்றது. ஆட்சி மாறியவுடன் ஊழல் செய்தவர்கள் அனைவரும் உள்ளே போக போகின்றனர்.

நீட் தேர்வை இங்கே அனுமதித்தது எடப்பாடி அரசு எனவும் , வெறும் 8 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் மருத்துவராக முடியும் நிலை இருப்பதாகவும் கூறிய அவர், சசிகலா காலில் விழுந்ததை போல முதல்வர் ராஜ்பவனுக்கு தவழ்ந்து போய் மண்டியிட்டாவது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி வாங்கி கொடுங்கள் எனவும் தெரிவித்தார்.
கோவையில் போஸ்டர் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் அடுத்த முறை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

போராட்டம் நடைபெறுவதற்கு முன் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல் துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது.

மேலும் படிக்க